in

77 நிமிடங்கள் தொடர் சிலம்பம் மற்றும் வாள் சுற்றும் உலக சாதனை நிகழ்வு


Watch – YouTube Click

77 நிமிடங்கள் தொடர் சிலம்பம் மற்றும் வாள் சுற்றும் உலக சாதனை நிகழ்வு

பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில், நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 77 நிமிடங்கள் தொடர் சிலம்பம் மற்றும் வாள் சுற்றும் உலக சாதனை நிகழ்வு பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாரம்பரிய கலைகளை இன்றளவும் பயிற்றுவிக்கும் பயிற்சி கூடங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வருகிறது அந்த வரிசையில் செயல்படும் திருமலை சிலம்பம் விளையாட்டு கலைச் சங்கம் சார்பில் இன்று பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் 77 நிமிடங்கள் தொடர் சிலம்பம் மற்றும் வாள் சுற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை
திருமலை சிலம்பம் விளையாட்டு கலை சங்கம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு இணைந்து நடத்தின. இதன்படி 77 நிமிடங்கள் தொடர் சுழற்சி முறையில் வாள் மற்றும் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் காலை 7.45 மணிக்கு தொடங்கியது.

திருமலை சிலம்ப பள்ளியின் குரு டாக்டர் சங்கரன் ஆசான் சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார். திருமலை சிலம்ப பள்ளியில் சிலம்பம் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 602 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 200 மாணவர்கள் வாள்வீச்சு, 200 மாணவர்கள் இரட்டைக் கம்பம் வீச்சு, அடுத்து ஒற்றைக் கம்பத்தில் சிலம்பம் வீசும் மாணவர்கள் 100 பேர், மூன்று கம்பம் சுற்றுபவர்கள் 102 பேர் கலந்துகொண்டு தொடர்ச்சியாக சிலம்பம் மற்றும் வாள் சுற்றி விளையாடினர். காலை 7:45 மணிக்கு போட்டிகள் தொடங்கி 77 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தாழ்வு மனப்பான்மை அகல போட்டி தேர்வு அவசியம் – இன்ஸ்பெக்டர் ராஜகுமார்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு