நெல்லை வேனுவன குமார கோவிலில் ஆசாட நவராத்திரி நிறைவு விழா: வாராகி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் தரிசனம்
ஆஷாட நவராத்திரி என்பது ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடத்தப்படும் சக்தி வழிபாடாகும்.
இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி, ஜூலை 15ம் தேதி துவங்கியது. இந்த விழாவையொட்டி நெல்லை டவுன் வேணுன குமாரர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வராகி அம்மனுக்கு கடந்த 10 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று .
வருகிறது இன்றைய தினம் ஆசாடன் நவராத்திரியின் நிறைவு நாளை ஒட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் வாராகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனை மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் ஆசார நவராத்திரி நிறைவு நாளை ஒட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் மஞ்சள் கயிறு குங்குமம் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டது

