புதுச்சேரி; காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.4.80 கோடி பயிர் ஊக்கத்தொகை
காரைக்கால் மாவட்டத்தில் 2025-26 சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த 4,217 விவசாயிகளுக்கு ரூ.4.80 கோடி பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6,000, அட்டவணைப் பிரிவினருக்கு ரூ.7,000 வழங்கப்பட்டது. மேலும், நெல் விற்பனை ஊக்கத்தொகையாக ரூ.1.02 லட்சமும், நிலத்தடி நீர் பாசன குழாய் அமைத்த விவசாயிகளுக்கு ரூ.3.22 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.
இதனை வேளாண் அமைச்சர் ராஜசேகரன் முன்னிலையில், முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்


