in

திருவாரூர்-வெளி மாநில சாராய பாட்டில்களை பறிமுதல்


Watch – YouTube Click

திருவாரூர்-வெளி மாநில சாராய பாட்டில்களை பறிமுதல்

 

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்று வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நாடாகுடி என்கிற கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டு விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நாடாகுடி பகுதியைச் சேர்ந்த உலகநாதன் வயது 52 என்பவரது வீட்டில் பீரோவில் இருந்து 280 பாண்டி சாராய பாட்டில்கள் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சுந்தர் வயது 60 என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்ட எஸ் பி ஜெயக்குமார் சுந்தரிடம் மது பாட்டில்கள் எங்கு இருக்கிறது சொல்லு என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவரது வீட்டிற்கு எதிரில் உள்ள குப்பை மேட்டில் தேடிய காவலர்களுக்கு பாண்டி சாராய பாட்டில்கள் அடுத்தடுத்து கிடைக்க கிடைக்கத் தொடங்கின.

மொத்தம் 500க்கும் மேற்பட்ட பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உலகநாதன் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தர்ஷினியை காப்பாற்றும் தோழர்… திசை திரும்பும் எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடில்

விருதுநகர் ராணுவ வீரரின் வீட்டில் நகை திருடியவர் கைது