முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் நடிகை திரிஷா குறித்தும் அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு
தூத்துக்குடியில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசும்போது
ஏன்னா ஆளுங்கட்சியா இருக்குற, எதிர்க்கட்சியா இருக்குற… காவிரி தண்ணிக்காக சண்டை போட்டு நீங்க கொண்டு வந்தீங்கன்னா, சரி காவிரி தண்ணியாவது அதாவது.எங்க அண்ணி த்ரிஷாவ பத்தி எவன்டா பேசுனது? என ஆர் பி உதயகுமார் பேசினார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகி கௌதம் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் அந்த புகாரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்தும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


