ஐ.டி.யு (CITU) மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து நடத்திய தேசம் தழுவிய மறியல் போராட்டம்
தேனியில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சி.ஐ.டி.யு (CITU) மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து நடத்திய தேசம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது
விலைவாசி உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி (GST) வரியை உடனே ரத்து செய்ய வேண்டும்.
தொழிலாளர் நலன்: தொழிலாளர் விரோத புதிய சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்; குறைந்தபட்ச மாதச் சம்பளமாக ₹26,000 வழங்கச் சட்டமியற்ற வேண்டும்.

பணி நிரந்தரம்: போக்குவரத்து, மின்சாரம், ஊராட்சி, அங்கன்வாடி, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கல்வி விவசாயம் ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதோடு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு போதிய மானியம் வழங்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், DYFI, AIDWA மற்றும் அனைத்து ஓய்வுபெற்றோர் கூட்டமைப்பு (தேனி தாலுகா) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்


