in

கசாப்பு கடையில் கறி வெட்டி கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த தேமுதிக


Watch – YouTube Click

கசாப்பு கடையில் கறி வெட்டி கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த தேமுதிக

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் வாண்டையார் இருப்பு பகுதியில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்தும், கசாப்பு கடையில் கறி வெட்டி கொடுத்தும், மூத்தவர்கள் காலில் விழுந்தும் வாக்கு சேகரித்தார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன், முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு கேட்டார்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கசாப்பு கடைக்கு சென்றவர் கறி வெட்டி கொடுத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து வீடு வீடாக சென்று வயதில் மூத்தவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் சிவநேசன், முன்னாள் அமைச்சர் காமராஜர் ஆகியோருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேண்ட் வாத்ய இசையுடன் கிராம கிராமமாக சென்று வாக்கு சேகரித்தனர்.


Watch  YouTube Click

What do you think?

இயக்குனர் பாலா அனிதா விஜயகுமார்  Family யுடன் என்ன செய்து கொண்டிருகிறார் பாருங்கள்

தொட்டியம் லாலா பேட்டை இடையே காவிரி ஆற்றில் புதிய தடுப்பணை பாரிவேந்தர் வாக்குறுதி