in

போளூரில் திமுக சார்பில் கலைஞர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா


Watch – YouTube Click

போளூரில் திமுக சார்பில் கலைஞர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வெயிலின் கோரத்தாண்டவம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் கலைஞர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

போளூர் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் கலைஞர் தண்ணீர் பந்தலை மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் வெள்ளரி, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உடன் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.விசேகரன், நகர செயலாளர் தனசேகரன், பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தஞ்சாவூர் பெருமாள் கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் கருட சேவை சுவாமி புறப்பாடு

ராமநவமி கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ராமர் சீதை திருக்கல்யாணம்