in

புஷ்பா 2 பட காட்சிகள் இணையத்தில் கசிந்தன, கோபமாக கோரிக்கை வைத்த ராஷ்மிகா மந்தனா

புஷ்பா 2 பட காட்சிகள் இணையத்தில் கசிந்தன, கோபமாக கோரிக்கை வைத்த ராஷ்மிகா மந்தனா

தற்பொழுது எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களின் காட்சிகளை செல்போனில் திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்.

அதனால் படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் உபயோகக் கூடாது என்று Strict …டாக ஆர்டர் போடப்பட்டது, வெளி ஆட்கள் நுழையாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னரே படப்பிடிப்பு தற்போது நடக்கின்றது. அதையும் மீறி சில காட்சிகள் வெளியே கசியே தான் செய்கிறது .

அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர்கள் ‘புஷ்பா தி ரூல்’ 2 வின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள். ஜனவரி 29 அன்று, தயாரிப்பாளர்கள் ஒரு சிறப்பு போஸ்டருடன் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

‘புஷ்பா 2’ பல மொழிகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. “200 நாட்களில் மீண்டும் ஆட்சி தொடங்குகிறது என்ற வார்த்தைகளுடன் ஒரு போஸ்டரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுனா இணைந்து நடிக்கும் புஷ்பா 2 படப்பிடிப்பின் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

இதை குறித்து கோபத்துடன் பதில் அளித்த ராஷ்மிகா படப்பிடிப்பில் எல்லோரும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறோம், பல பேர் வியர்வை சிந்தி இரவு பகலாக தூக்கமின்றி வேலை செய்கிறார்கள், புஷ்பா2 படத்தின் மீது உலக அளவில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் காட்சிகள் வெளியே கசிந்துள்ளது சரியா, அல்லு அர்ஜுனாவின் வித்தியாசமா தோற்றங்கள் தற்பொழுது வலைத்தளத்தில் வருகின்றது, ரசிகர்களுக்கு தியேட்டரில் சர்ப்ரைஸ் கொடுக்கவே பட குழுவினர்கள் அரும்பாடுபடுகிறார்கள், அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று ராஷ்மிகா மந்தனா கோரிக்கை வைத்துள்ளார்.

What do you think?

பகையை மறந்து மனைவியின் படத்தை பாராட்டிய தனுஷ்.. தெறிக்க விடும் லால் சலாம் Trailer

செஞ்சி அருகே மளிகை கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால் பரபரப்பு