in

காரைக்கால் தனியார் பள்ளியில் 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா நிகழ்ச்சி


Watch – YouTube Click

காரைக்கால் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறுவர்களுடன் பெற்றோர்களும் நடனமாடி அசத்தினர்.

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில் 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற துறையினை தேர்ந்தெடுக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அப்போது எல் கே ஜி குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் இணைந்து நடனமாடியது காண்போரை மகிழ்ச்சியில் அழ்த்தியது. அதனை தொடர்ந்து தேவதைகள் வடிவில் வந்த மாணவிகளின் வண்ணத்துப்பூச்சி நடனம் அகிம்சை வண்ணத்துடன் மேடையை அலங்கரித்தது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மணிமேகலை கண்ணையன், மதுக்கண்ணையன், பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் தை மாதம் மஹாலட்சுமி பூஜை எனும் 2008 திருவிளக்கு பூஜை