in

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் தை மாதம் மஹாலட்சுமி பூஜை எனும் 2008 திருவிளக்கு பூஜை


Watch – YouTube Click

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் தை மாதம் கடைவெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் 2008 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு தை கடைசி வெள்ளி நடைபெற்ற 2008 திருவிளக்கு பூஜையில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 2000ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜை,அர்ச்சனை செய்து அருள்மிகு பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.2008 விளக்கு பூஜை முன்னிட்டு ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்திலேயே 2008 திருவிளக்கு பூஜை அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.விழாவில் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபத்ரகாளியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

காரைக்கால் தனியார் பள்ளியில் 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு கண்டணம்