in

தேமுதிக வேட்பாளர்க்கு ஆதரவாக டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்


Watch – YouTube Click

விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பயணிகளுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் அரசு பேருந்துக்குள் ஏறி வாக்கு சேகரித்த விஜய பிரபாகரன் மற்றும் கே.டி. இராஜேந்திர பாலாஜி

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர் நட்சத்திர தொகுதியாக கருதப்படக் கூடிய விருதுநகரில் பரப்புரை என்பது தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

இதில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பில் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் விருதுநகரில் இரண்டாவது நாளாக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய விஜய பிரபாகரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி ஆகியோர் வீடு வீடாக சென்று முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மேலும விருதுநகர் பேருந்து பழைய நிலையத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் இருவரும் பேருந்துக்கு உள்ளே சென்று பயணிகளிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்த ஆவின் டீ கடைக்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி அங்கிருந்தவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

மேலும் கே.டி.இராஜேந்திர பாலாஜி தயாரித்து கொடுத்த டீயை வேட்பாளர் விஜய பிரபாகரன் ருசித்து அருந்தினார். பரப்புரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

வாக்கு சேகரிப்பின் போது 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டை காண்பித்து பரிசு அறிவித்த கரூர் பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன்

வருமான வரி விதிகளில் மாற்றம் வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது.