in

ஸ்வீட்ஸ் குடோனில் சிலிண்டர்கள் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் தீயால் கருகி சேதம்


Watch – YouTube Click

ஸ்வீட்ஸ் குடோனில் சிலிண்டர்கள் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் தீயால் கருகி சேதம்

பாரி ஸ்வீட்ஸ் குடோனில் உள்ள சமையலறை எரிவாய்வு சிலிண்டர்கள் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் தீயால் கருகி சேதம்

ஆரணி டவுன் பஜார் வீதி காந்தி சிலை அருகே அமைந்துள்ள ஆரணி நகராட்சி மன்ற துணைத் தலைவர் அதிமுகவை சேர்ந்த பாரி பாபு என்பவருக்கு சொந்தமான பாரி ஸ்வீட்ஸ் கடை உள்ளது

கடையின் பின்புறத்தில் கடைக்கு தேவையான இனிப்பு வகைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவது வழக்கம்

இன்று மாலை வழக்கமாக இனிப்பு கார வகைகளை தயாரித்து விட்டு கடை உரிமையாளர் மற்றும் வேலை ஆட்கள் இனிப்பு வகைகள் செய்யும் குடோனிலுள்ள சமையலறைகளை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்

துரதிஷ்டவசமாக குடோனிலுள்ள. 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததில் குடோன் முழுவதும் தீ கரையாகி அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டு தீ மல மல வென கொழுந்து விட்டு எறிய தொடங்கியது

தகவல் அறிந்த மின்சாரத் துறையினர் உடனடியாக அப்பகுதி முழுவதும் மின் துண்டிப்பு செய்ததில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

இதே நேரத்தில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்

மேலும் தீயணைப்புத் துறையினர் டிராக்டர் உள்ளிட்ட மிகப்பெரிய வாகனங்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து குழாய் பைப்புகள் மூலமாக தண்ணீரை பீச்சிட்டு அடித்ததில் தீயானது கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது

ஸ்வீட் குடோனில் ஏற்பட்ட தீ செய்தியானது ஆரணி நகர் பகுதி முழுவதும் பரவியதில்

ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் 1000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் என்னவோ, ஏதோ என்று பொது மக்கள் கூட்டம் அலைமோதியது

தற்போது வரையில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிய வந்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்


Watch – YouTube Click

What do you think?

5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர்

திமுக அரசு, குவாட்டர் கொடுத்து குடிக்க சொல்கின்றது