in

வாய்க்கால் கட்டும் பணியும் போது மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து தமிழக தொழிலாளர் 3 பேர் பலி..


Watch – YouTube Click

வாய்க்கால் கட்டும் பணியும் போது மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து தமிழக தொழிலாளர் 3 பேர் பலி..

 

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் பொலிவுறு நகரத்திட்டத்தின் வாய்க்கால் அமைக்க பணி நடைபெற்று வருகிறது..

இன்று காலை 16 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணி நடந்தது.

அப்போது மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது.. இதில் இடிபாடுகளுக்குகிடையே தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

இதில் 3 பேர் இறந்துள்ளனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்க மிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத காரணத்தினால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்கள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கட்டுமான பணியில் திருவண்ணாமலை, ஆத்தூர் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், சம்பத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.

இந்த விபத்தில் அரியலூர் மாவட்ட நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் இறந்துள்ளனர். மேலும் 3 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..


Watch – YouTube Click

What do you think?

இந்து மக்கள் கட்சியை புறக்கணித்த பாஜக, நாகை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது

எம்பி கதிர் ஆனந்த் பேச்சுக்கு பெண்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் நாதக வேட்பாளர் கார்த்திகா