in

பூக்கடையில் பூக்கட்டி கொடுத்து பெண்களிடம் வாக்கு தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன்


Watch – YouTube Click

பூக்கடையில் பூக்கட்டி கொடுத்து பெண்களிடம் வாக்கு தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன்

 

தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் வீரசிங்கம்பேட்டை மரியம்மன் கோவில் வாசலில் உள்ள பூக்கடையில் பூக்கட்டி கொடுத்து பெண்களிடம் வாக்கு சேகரித்தவர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை யே மிஞ்சும் அளவிற்கு மூதாட்டிகளை கட்டிப்பிடித்து காலில் விழுந்து வாக்கு கேட்டார்.

தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரசிங்கம் பேட்டை, திருச்சேற்றுத்துறை, கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வீரசிங்கம் பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவிலில் வழிப்பாடு செய்தார்.

கோவிலில் இருந்து வெளியே வந்தவர் கோவில் முன்பு உள்ள பூக்கடைக்கு சென்று பூக்கட்டி, கையால் முழம் போட்டு பூ விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் பூக்கடையில் இருந்த மூதாட்டியை கட்டி அனைத்து , காலில் விழுந்து வாக்கு கேட்டார்.

அந்த மூதாட்டி நீ ஜெயிச்சிடுவப்பா என ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார்.


Watch – YouTube Click

What do you think?

பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி

நொச்சிக்குளத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி