in

புதுச்சேரியில் மனைவி நடத்தையில் சந்தேகத்தால் கணவனின் பகிரங்க செயல்


Watch – YouTube Click

புதுச்சேரியில் மனைவி நடத்தையில் சந்தேகத்தால் கணவனின் பகிரங்க செயல்

 

புதுச்சேரியில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு.மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்.

புதுச்சேரி சாரம் வெங்கடேஸ்வரா நகர் பொறையார் குளம் பகுதியை சேர்ந்த தம்பதியர் விக்னேஷ்வரன் (வயது 47), தச்சு தொழிலாளி. இவரின் மனைவி இந்துமதி(37). இவர்களுக்கு விஷ்ணு(14), ரேவதி(12) என 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். மனைவியின் நடத்தையில் விக்னேசி ற்கு கடந்த 2 மாதமாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நிலவி வந்தது. அடிக்கடி வாய்தகராறு முற்றி அடிதடி அளவுக்கு செல்லும். அதேபோல இன்றும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி இந்துமதி கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த இந்துமதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்ட விக்னேஷ், அடுத்த தெருவில் உள்ள தன் அக்கா வீட்டில் சாவியை ஒப்படைத்தார். மனைவியை கொலை செய்த விபரத்தை தெரிவித்துவிட்டு தான் சரணடைய போவதாக தெரிவித்தார். பின்னர் விக்னேஷ் தன்வந்திரி போலீஸ் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம், நடந்த சம்பவத்தை தெரிவித்து சரணடைந்தார்.

கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இந்துமதி உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து தன்வந்திரி போலீசார் விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மலர் மற்றும் காய்கனி கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் தமிழில் உரையாற்றிய ஆளுநர் ஆர் என் ரவி