in

நடிகை மஞ்சு வாரியர் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்


Watch – YouTube Click

நடிகை மஞ்சு வாரியர் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் – அப்போது அவருடன் செல்பி எடுத்த ரசிகர்கள்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாநகர் புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..

அந்த வகையில் திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரஞ்சித் குமார் தலைமையில் காவல்துறை துணை ஆய்வாளர் கவுசல்யா குழுவினர் சோதனை மேற்கொண்டனர் அப்போது.

கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று வந்தது அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் காரை ஓட்டிக் கொண்டு வந்த நபர் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகையான மஞ்சு வாரியர் இருந்தது தெரிய வந்தது இதை அடுத்து அவரது விவரங்களை கேட்டுக் கொண்டே காரை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்..

அப்போது காரில் இருப்பது அஜித்துடன் துணிவு தனுசு உடன் அசுரன் போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை என தகவல் வேகமாக பரவ பின்னால் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேகமாக அவரது காரை வேகமாக சோதனை செய்து விவரங்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மாட்டுவண்டியில் வந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சமயபுரம் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது