in

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை


Watch – YouTube Click

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

 

கடந்த 01.11.2015-ஆம் தேதி திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் 54 வயதுள்ள ஐயப்பன், 5 வயதுள்ள சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்போதைய திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்குபதிவு செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

அந்த வழக்கு சம்பந்தமான விசாரனை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,

இன்று நீதிபதி பார்த்தசாரதி முன்பு விசாரணைக்கு மீண்டும் இந்த வழக்கு வந்த நிலையில் குற்றவாளி ஐயப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.1,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதன் பேரில் ஐயப்பன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் திருமதி என் புவனேஸ்வரி ஆஜராகி திறம்பட வாதாடி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தந்தார்.


Watch – YouTube Click

What do you think?

ராமேஸ்வரம் கோவில் உண்டியலில் ரூ.1.56 கோடி வசூல்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஜவ்வாது மலையில் மரக்கன்றுகளை நட்டு வர மரக்கன்றுகளை வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்