in

ராமேஸ்வரம் கோவில் உண்டியலில் ரூ.1.56 கோடி வசூல்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்


Watch – YouTube Click

ராமேஸ்வரம் கோவில் உண்டியலில் ரூ.1.56 கோடி வசூல்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.56 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

அமாவாசை, தமிழ் புத்தாண்டு, தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ராமநாத சுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்பு கோவில் உள்பட உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது.

பின்னர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது.

அங்கு இணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 56 லட்சத்தி 18 ஆயிரம் ரூபாய், தங்கம் 68.5 கிராம், வெள்ளி 5 கிலோ 565 கிராம், வெளிநாட்டு நாணயம் 142 காணிக்கையாக கிடைத்தது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள்,பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

27 வயது நடிகை அப்பார்ட்மெண்டில் தூக்கிலிட்டு தற்கொலை

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை