in

பழனியில் உண்டியல் எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை வரவு ரூ. 5 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது


Watch – YouTube Click

பழனி மலைக்கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ. 5 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது.

எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 5 கோடியே 29 இலட்சத்து 34ஆயிரத்து 887 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1196 கிராமும், வெள்ளி 21,783 கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 717 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கலைஞர் உரிமை தொகை திட்டம் ரத்து?

வந்தவாசியில் அமைச்சர் எ வ வேலு தேர்தல் பிரச்சாரம்