in

குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தால் ஆண்மை நீக்கம் அதிரடி சட்டம்


Watch – YouTube Click

குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தால் ஆண்மை நீக்கம் அதிரடி சட்டம்

 

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் கொடுத்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டத்தை தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சில அமைப்புகள் பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

2 கோடியே 80 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்திய பெருங்கடலில் உள்ள இந்த மடகாஸ்கர் தீவின் நாடாளுமன்றம், கடந்த பிப்ரவரி 2ம் தேதி சட்டத்தை நிறைவேற்றியது. இதையடுத்து, செனட் கடந்த வாரம் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இப்போது உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அதிபர் ஆண்ட்ரெஸ் ரஜோலினாவால் சட்டமாக கையெழுத்திடப்பட்டது.

சட்டத்தின் விதிகளின்படி,10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில், 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வன்கொடுமை செய்யப்பட்டால்,குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறை மூலம் தண்டிக்கப்படுவார்கள். இது தவிர 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால், ரசாயன முறை மூலம் காஸ்ட்ரேஷன் தண்டை விதிக்கப்படும்.

கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஹார்மோன் சுரப்பைத் தடுக்கவும், பாலியல் ஆசையைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் தமிழில் உரையாற்றிய ஆளுநர் ஆர் என் ரவி

ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு தான் தகுதியானவர்