in

சிவகங்கை காளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை


Watch – YouTube Click

சிவகங்கை காளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

 

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சங்கடகர சதுர்த்தியை திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு மாசி மாத சங்கடஹர சதுர்த்தி திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அருகம்பு மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்தனர் பின்னர் தயிர்சாதம் மோதகம் நெய்வேத்தியம் செய்து மங்கள கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தேக்வாண்டோ போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிரோஷா பேட்டி

சிவகங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை