in

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

 

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஈவேரா தலைமையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழு மூலம் குறைவான ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை சமன் செய்ய வேண்டும். பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, ஊர் புற நூலகர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்கவேண்டும்.

அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

துறையூர் அருகே கல்லூரி மாணவர்களால் பரபரப்பு

சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவி அமுதா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு