in ,

மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது – புஸ்ஸி ஆனந்த்


Watch – YouTube Click

மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது – புஸ்ஸி ஆனந்த்

 

மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் தளபதி அறிவிப்பார் என்றும் மதுரையில் த.வெ.க.மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்- யின் 50 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை ஓடைப்பட்டியில் 550 நபருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை, ஊர் பொதுமக்களுக்கு தையல் மிஷன், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ” மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தளபதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதி தான்.

அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர் தான் தெரிவிப்பார். தளபதியின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது செய்யவும் மாட்டோம். தளபதி மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார்” என்றார்.


Watch – YouTube Click

What do you think?

பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

 கால்நடைகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி தடுப்பூசி போடும் நிகழ்வு