in

திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

 

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செஞ்சியில் அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலை இருந்து நான்கு முனை கூட்ரோடு தொடங்கி திருவண்ணாமலை சாலை வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டையுடன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும், கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டிக்கிறோம், நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு, சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடு, கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு, உள்ளிட்ட கண்டன கோஷங்களுடன் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செஞ்சி நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி புண்ணியமூர்த்தி, விநாயகமூர்த்தி, நடராஜன், பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிருத்விராஜ் இவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மனித சங்கிலி கண்டன ஆர்ப்பாட்டத்தில்

மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் அருண்தத்தன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மல்லிகா குமார், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனாஜெயபால், மனோகரன்,வல்லம் ஒன்றிய இளைஞரணி கல்வராயன்,பேரவை ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், பாசறை பாலமுருகன், லோகநாதன், செஞ்சி நகரம் சரவணன், கமலக்கண்ணன், சையத்அஜீஸ், வழக்கறிஞர் குமரன், சின்னதுரை, மணிமாறன், திருமலை, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்