in

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்


Watch – YouTube Click

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

 

திருவாரூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் விஜயபுரம் கடை வீதி தொடங்கி ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபெற்றது

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது ஆட்சி காலத்தில் போதை வஸ்துக்கள் பெரும் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரிகள் இளைஞர்கள் பெருமளவு கூடும் இடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பல்வேறு விதமான போதைப் பொருட்கள் பல வண்ணங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாக கிடைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தி மாணவர்கள் இளைஞர்களுக்கு நல்வழியை ஏற்படுத்துகின்ற பாதுகாப்பான நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக என உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். மேலும் சிஐஏ – வுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததாக திமுகவினர் எழுப்பி உள்ள குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்கையில் மு.க. ஸ்டாலின் தேவையில்லாதவற்றை கூறி வருவதாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அரசு விழா நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்திற்கு பிரியாணி பற்றாக்குறை பொதுமக்கள் ஏமாற்றம்

திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்