in

தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் திமுகவினர்


Watch – YouTube Click

தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் திமுகவினர்

நல்ல காலம் பொறக்க போது நல்ல காலம் பொறக்க போகுது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதிகளில் நூதனமான முறையில் காலையிலேயே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட திமுகவினர்.

போளூர் டவுன் பகுதிக்கு உட்பட்ட மாட்டுப்பட்டி தெரு, டைவர்ஷன் ரோடு, கோவிந்தசாமி நகர், கிழக்குத் தெரு, பஜார் வீதி, வசந்த நகர், பகதூர் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களில் இன்று காலை முதல் நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் திமுகவினர் குடுகுடுப்பைகாரர் வேடம் அணிந்து தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் வீதி தோறும் திமுகவிற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

குடுகுடுப்பைகாரர் வேடம் அணிந்துள்ள தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் வீதி தோறும் குடுகுடுப்பைகாரர் பேசுவது போன்று கையில் உடுக்கையுடன் நல்ல காலம் பொறக்க போது நல்ல காலம் பொறக்க போகுது ஜக்கம்மா சொல்லுறா ஜக்கம்மா சொல்லுறா உலகத்திலேயே இலவச பஸ் கொடுத்தது நம்ம முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா, மோடி இன்னொருமுறை பிரதமரா வந்தா நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா, மோடி பிரதமராக வந்து 15 லட்ச ரூபாய் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இன்னும் 15 ரூபா கூட கொடுக்கல ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா, வாயால வடை சுடுற ஒரே பிரதமர் யார் என்றால் மோடிதான் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என இவ்வாறு தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக குடுகுடுப்பைகாரர் வேடமடைந்து உடுக்கையுடன் நூதனமான முறையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பது இப்பகுதியில் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காலை முதலே குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து திமுகவினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்பரம் காட்டி வருகின்றனர். உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ 44 பேர் பலி

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது