in

வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ 44 பேர் பலி


Watch – YouTube Click

வங்கதேசத்தில் பயங்கர தீ 44 பேர் உயிரிழப்பு

வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில்  இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டேக்காவில் பெய்லி சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில்  இரவு 9.45 மணியளவில் முதல் தளத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உள்ள சமைலயறையில் தீ பற்றியது என அந்நாட்டு செய்தி நிறுவனமான டாக்கா ட்ரிப்யூன் (Dhaka Tribune) செய்தி வெளியிட்டுள்ளது.

சமையல் எரிவாயு இணைப்பானது கட்டிடத்தில் உள்ள பல்வேறு தளங்களில் இணைக்கப்பட்டு இருந்ததால் அதன் மூலம் தீயானது மளமளவென முழு கட்டடம் முழுவதும் பரவியது. தீ பற்றிய உடன் படிக்கட்டுகள் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். பலர் கட்டிடத்தின் மேல் இருந்து குதித்தும் உள்ளனர்.

விபத்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் தீ அணைத்து, மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், டாக்கா பகுதி சட்டமன்ற உறுப்பினர் AFM பஹாவுதீன் நசிம் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகாலை 2 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சென், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.அடுத்ததாக மற்றொரு மருத்துவமனையில் கூடுதலாக 10 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் மத்திய போலீஸ் மருத்துவமனையில் மற்றொருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு அடுக்கு கிரீன் கோஸி கட்டிடத்தில் இருந்து இருந்து உயிரிழந்த 44 பேர் உட்பட 70 நபர்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது


Watch – YouTube Click

What do you think?

திருப்பாதிரிபுலியூர் பிடாரி அம்மன் கோவிலில் 79 ஆம் ஆண்டு 108 திருக்குட நன் நீராட்டு வைபவம்

தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் திமுகவினர்