in

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்


Watch – YouTube Click

 

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்

 

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சர்பில் புகைப்பட்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை அங்காடியையும் பார்வையிட்ட அவர் அங்கு செய்தியளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையல் தமிழக அரசின் 33 மாத கால சாதனைகளை விளக்கும் வகையில் சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் கண்காட்சியை திறந்து வைப்பதல் பெருமை அடைகிறேன் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள் பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம் அவர்கள் தான் சொத்து வாங்கலாம் என்ற நிலை இருந்தது ஆனால் வெள்ளைக்காரர்கள் கால்டுவெல், ஜி யு போப் போன்றவர்கள் வருகைக்கு பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது.

அவர்கள் மத போதகர்களாக வந்தாலும் அதை தாண்டி இந்திய தமிழக கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள் தமிழர்கள் இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு கிறிஸ்த்தவ மிசனரிகளே காரணம் உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான் கால்டுவெல்லை இங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப் பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக, வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சட்டப்பேரவை முதன்மைச் செயல்ருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு விரைவில் வெளியாகும் அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சயில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி, மாமன்ற உறுப்பினர்கள் கந்தன், கோகுலவாணி சுதாமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Watch – YouTube Click

What do you think?

திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.சார்பாக மனிதசங்கிலி போராட்டம்