in

வீலிங் செய்து ரீல்ஸ் போடும் இளைஞர் மீது வழக்கு


Watch – YouTube Click

வீலிங் செய்து ரீல்ஸ் போடும் இளைஞர் மீது வழக்கு

 

திருவாரூர் மாவட்டம் புலிவலம் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவரது மகன் கோதர் மைதீன் வயது 19. பஷீர் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

பஷீர் தனது மகன் கோதர் மைதீனுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளார். இதில் பள்ளி படிப்பை கூட முடிக்காத கோதர் மைதீன் தினமும் வீலிங் செய்து ரீல்ஸ் போடுவதை முழு நேர வேலையாக செய்து வந்துள்ளார்.

குறிப்பாக இவர் நாகூர் தர்கா ரோடு நாகூர் கடற்கரை சிபிசிஎல் அலுவலகம் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை என்று பல்வேறு இடங்களில் வீலிங் செய்து ரீல்ஸ்களை இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார்.

இந்த நிலையில் கங்களாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி அவரது தங்கை அர்ச்சனா இருவரும் நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் பயின்று வரும் நிலையில் கல்லூரி முடிந்து புதிய பேருந்து நிலையத்தில் காப்பகத்தில் விட்டிருந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புலிவலம் அருகே உள்ள வேலங்குடி பகுதியில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்தபோது வேலங்குடி ரயில்வே கேட் அருகே வீலிங் செய்து கொண்டிருந்த கோதர் மைதீன் ஸ்கூட்டி மீது மோதியதில் மாணவிகள் இருவரும் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் நடத்திய விசாரணையில் இளைஞர் கோதர் மைதீன் வீலிங் செய்து ரீல்ஸ் போடுவதையே வாடிக்கையாக வைத்திருந்ததும் இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த ஆர்த்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைஞர் கோதர் மைதீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

அடக்கி வாசிங்க குஷ்பூ அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி