காந்தமலை தேய்பிறை சஷ்டி தங்க கவச அலங்காரம்
நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் தேய்பிறை சஷ்டி முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்காரம் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார்.
ஆனி மாத தேய்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிகக்காய், பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம்சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


