நாயக்கன்பேட்டை அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்பேட்டையில் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த வியாழன் கோபூஜை, கணபதி ஹோமம் நடந்தது.
வெள்ளியன்று முதல் கலை யாக சாலை பூஜையும், சனி அன்று 2ஆம் கால பூஜை, பூர்ணஹாதி நடந்தது. இன்று புனித நீர் விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் வந்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை நாயக்கன் பேட்டை நடுத்தெரு பூர்வீக செங்குந்தர்கள், விழா குழுவினர் ராமு, கே.ரவிச்சந்திரன், ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


