in

முகவரி கொடுத்த முதல்வர்கள் படத்தை பயன்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன்


Watch – YouTube Click

முகவரி கொடுத்த முதல்வர்கள் படத்தை பயன்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன்

எனக்கு முகவரி கொடுத்த முதல்வர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன் நெல்லையில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்த பின்னர் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நான்காவது நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த 25 ஆண்டுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை பணிகளையும் செய்துள்ளேன் அந்த மனநிறைவோடு வேட்பாளராக போட்டியிடுகிறேன் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உள்ளது மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமராக பதவி ஏற்பார் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் யார் என்று கேட்டால் மோடி என்று சொல்கிறார்கள் வல்லரசாக இந்தியா உருவாக வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களாக இருந்தாலும் திருநெல்வேலி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் செய்யவில்லை திருநெல்வேலிக்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பரப்பரையில் பயன்படுத்துவேன் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியும் தேர்தல் நடத்தும் அதிகாரியான கார்த்திகேயனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் தொழில் வளர்ச்சி, விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன், தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், திமுக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை , அதிமுக அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்

தனது 59 பிறந்த நாளை புதுமையாக கொண்டாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்