in

நடிகர் சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைதானவர் சிறையில் மரணம்


Watch – YouTube Click

நடிகர் சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைதானவர் சிறையில் மரணம்

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆசாமிகள் இவரது வீட்டை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் சல்மான் கானின் வீட்டை தொலைத்தது இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய குஜராத் போலீசார் பீகாரை சேர்ந்த விக்கி குப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு நபர்களை கைது செய்தனர். இவர்கள் இருவரும் பஞ்சாபில் இருக்கும் தாதா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி அன்மோல் விஷ்ணு ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் சல்மான்கான் வீட்டுமீது தாக்குதலை நடத்தினர்.

இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த அனுஜ் தாபன், மற்றும் சோனு சுபாஷ் சந்தரை கடந்த மாதம் 25 ஆம் தேதி பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சோனு சுபாஷ் உடல்நிலை காரணமாக நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது மற்ற 3 பேரையும் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது.

அன்மோல் விஷ்ணுவை மும்பையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள லாக்கப்பில் விசாரணைக்காக வைக்கப்பட்ட போது நேற்று மதியம் 1 மணி அளவில் அங்கிருந்த கழிவறையில் துணியை சுற்றி தூக்கில் தொங்கினார்.

அதிர்ச்யடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்’ தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இவரின் மரணத்தால், சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னணி என்ன என்ற விசாரணையில், போலீசாருக்கு ..பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சுட்டெரிக்கும் வெயிலால் மிகவும் குறைந்த அளவில் வரும் நீரில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நீங்கள் CWC..யில் கோமாளியாக பங்கேற்றால் பார்க்க மாட்டோம்…இர்பானை மிரட்டும் நபர்கள்