in

மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார், முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பிரச்சாரம்


Watch – YouTube Click

மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார், முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பிரச்சாரம்

 

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ராஜவேலு தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் சாக்லேட் மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…

இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் மாநிலம் வளர்ச்சி அடையும் மாநில வளர்ச்சிக்கு அதிக நிதி பெற்று தர முடியும் என்பதை நினைத்து வாக்களிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தை மறுபடியும் ஆள இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வருகிறது. கடந்த முறை வெற்றி பெற்ற வைத்திலிங்கம் புதுச்சேரிக்காக பேச முடிந்ததா அல்லது கோரிக்கைகளை நிறைவேற்றி தர முடிந்ததா என்று கேள்வி எழுப்பிய அவர், அவருக்கு நாடாளுமன்றத்தில் பேசக்கூட நேரம் கிடைக்கவில்லை என்று விமர்சனம் செய்தார்.

அதிக நிதி கிடைத்தால் தான் மக்களுக்கு திட்டங்களை செய்ய முடியும் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை உருவாக்க முடியும்,

புதுச்சேரியில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் ஏனென்றால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் திட்டங்கள் செயல்படுத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அப்போதான் நம் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று பேசிய ரங்கசாமி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக தனது அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பென்ஷன் உதவித்தொகை மாணவர்களுக்கு சைக்கிள் இலவச லேப்டாப் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் இந்த அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர் ரேஷன் கடையை முழுமையாக திறந்து அனைவருக்கும் அரிசியும் வழங்கப்பட உள்ளது. அதற்கு தாமரைக்கு வாக்களித்து நமச்சிவாயத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

சித்திரை 1ஆம் தேதி சிவன் முகத்தில் சூரிய ஒளி படும் அதிசயம்

வெத்தலை, பாக்கு, வாழைப்பழத்தை கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு