in

வெத்தலை, பாக்கு, வாழைப்பழத்தை கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

வெத்தலை, பாக்கு, வாழைப்பழத்தை கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முத்தியால்பேட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேந்திரன் தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இன்று 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வெற்றிலை பாக்கு வாழைப்பழம் கொடுத்து அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் நீங்கள் 100% வாக்களித்தால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என வலியுறுத்தி முத்தியால்பேட்டை முக்கிய வீதிகளில் தொண்டர்களுடன் வாக்குகளை சேகரித்தார்…


Watch – YouTube Click

What do you think?

மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார், முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பிரச்சாரம்

காங்கிரஸ் வேட்பாளர் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை