in

மின்துறை அலுவலகத்திற்கு ஊழியர்கள் வராததால் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து பணி செய்து எதிர்ப்பு


Watch – YouTube Click

மின்துறை அலுவலகத்திற்கு ஊழியர்கள் வராததால் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து பணி செய்து எதிர்ப்பு

நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்தடை,புகார் எடுக்க ஆளில்லாததால் மின்துறையை கைப்பற்றிய பொதுமக்கள்

காலை 10:30 மணி வரை அலுவலகத்திற்கு ஊழியர்கள் வராததால் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து பணி செய்து எதிர்ப்பு

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் மண்ணாடிபட்டு வாதானூர் சோம்பட்டு கூனிச்சம்பட்டு செட்டிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாமல் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளதுடன் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

அதேபோல் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இது சம்பந்தமாக திருக்கனூர் மின்துறை அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அந்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பட்டால் அப்பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில்

திருக்கனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு திருக்கனூர் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றினர் மேலும் காலை 10:30 மணி வரை அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் உள்ளே சென்ற பொதுமக்கள் நாற்காலியில் அமர்ந்து பணி செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசி தொடர் மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது

இந்த போராட்டம் குறித்து மக்கள் கூறும்போது.

திருக்கனூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே கடுமையான மின்வெட்டு இருந்து வருகிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது விவசாயம் செய்ய முடியவில்லை வயதானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் அதிகாரியிடம் கூறினால் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரி செய்து அதிகாரிகள் சீரான மின்சாரம் வழங்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் எச்சரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஒலிபெருக்கி உரிமையாளருக்கும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம்

பள்ளி திறந்த முதல் நாளே பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் புகார் மனு அளித்த மாணவர்கள்