in

வெறி நாய் கடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி


Watch – YouTube Click

வெறி நாய் கடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

 

தஞ்சை மாவட்டம் சோழபுரம் மஜீத் நகரில் வெறி நாய் கடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி 

தஞ்சை மாவட்டம் சோழபுரம் மஜீத் நகர் தவ்ஹித் பள்ளி தெருவில் வெறி நாய்கள் அட்டகாசம் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் தொழுகை முடித்து இவ்வழியாக வந்த ஆவணியபுரம் கிராண்ட் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர் முஹமது ஷகீல் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது வெறிநாய் துரத்தியது.

பதறி ஓடிய மாணவனை வெறிநாய் துரத்தி கடித்தது. இதனால் பதட்டமான மாணவன் அருகில் இருந்த வீட்டின் உள்ளே சென்று தன்னை பாதுகாத்துக் கொண்டார் இதேபோன்று தவ்ஹீத் பள்ளியின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ரஷ்யா பானு என்ற பெண்ணையும் கடித்து குதறியது இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற வெறி நாய்களின் எண்ணிக்கை பகுதியில் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகமும் போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

ரயிலை நிறுத்திய தம்பதியினருக்கு முதல்வர் பாராட்டை தெரிவித்து ரூபாய் 5 லட்சம் வெகுமதி

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர் இரண்டாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்