in

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர் இரண்டாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர் இரண்டாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்

 

நாகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் இரண்டாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்

நாகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யும் தமிழக அரசை கண்டித்து நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி எண் 311 படி இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

வெறி நாய் கடித்து இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்