in

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP நேரில் பாராட்டு


Watch – YouTube Click

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP நேரில் பாராட்டு

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த வட மாநில கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் இயந்திரங்களை பயன்படுத்தி நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட சாகிப் ஷேக், முகமது சர்ப்ராஜ், அருணஷேக், ஆகிய முக்கிய குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று மூன்று முக்கிய குற்றவாளிகளை கைது செய்து அதிரடி காட்டினார்.

இந்நிலையில் காவலர்களின் பணியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் (DGP) மிக விரைவில் திறம்பட செயல்பட்ட தனிப்படையான காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான காவலர்கள் சரவணன், குமார், பழனிவேல், நஸ்ருதீன், கோபிநாத், அறிவழகன் உள்ளிட்ட காவலர்களுக்கு நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டுகளை மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி