in

பிரதமர் நரேந்திர மோடி தூக்கம் இன்றி மக்கள் பணி செய்வதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் புகழாரம்


Watch – YouTube Click

பிரதமர் நரேந்திர மோடி தூக்கம் இன்றி மக்கள் பணி செய்வதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் புகழாரம்

 

நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி தினமும் 18 மணி நேரம் தூக்கம் இன்றி மக்கள் பணி செய்வதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் புகழாரம்.

அமிரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட மற்றும் உலக தரமான வசதிகள் அமைக்கவும், பொது மக்களின் வசதிக்காக 1500 ரயில் சுரங்க மற்றும் மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி புதுச்சேரி வில்லியனூர் ரயில்வே நிலையமும் 94 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்படுகிறது இதன் தொடக்க விழா என்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சபாநாயகர் செல்வம் பேசும்போது….

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்திலிருந்து புதுச்சேரிக்கு தேவையான நிதிகளை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் புதுச்சேரியின் மீது தனி கவனம் செலுத்தி போதுமான நிதிகளை ஒதுக்கி மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் நாட்டின் வளர்ச்சிக்காகவும் நாட்டு மக்கள் நலனுக்காகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தினமும் 18 மணி நேரம் தூக்கம் இன்றி மக்கள் பணி செய்வதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் புகழாரம்

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் வட்டமிட்டு சுற்றிய கருடபகவான்

ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ரத்தினவேல் பூஜை