in

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல்


Watch – YouTube Click

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல்

 

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழக முழுவதும் மார்ச் 20ம் தேதி துவங்கியது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 வது நாளாக இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.

பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

வேட்பு மனு தாக்களின் போது சாத்தூர் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய் பிரபாகரன் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார். பின்ன தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மேலும் விஜய பிரபாகரன் வேட்பு மனு தாக்கலின் போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.

பின்ன தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ராதிகா சரத்குமார் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ராதிகா சரத்குமார் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மேலும் ராதிகா சரத்குமார் வேட்பு மனு தாக்கலின் போது அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தண்ணீர் வறட்சியின் காரணமாக நள்ளிரவில் கிராமத்திற்குள் படையெடுக்கும் முதலைகள்

அடித்தது கொள்ளும் குஷ்பூ..வும் … ராதிகாவும்