in

உணவகத்தில் இட்லி சுட்டு பூரி தயாரித்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரி


Watch – YouTube Click

ஆரணி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆரணி டவுன் பகுதியில் உணவகத்தில் இட்லி சுட்டு பூரி தயாரித்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர்
ஜி.வி.கஜேந்திரன் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குபட்ட ஆரணி டவுன் பகுதியில்
இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் ஆரணி டவுன் 9வது வார்டு பெரிய கடை வீதியில் நகர மாணவரணி செயலாளர் குமரன் தலைமையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று மலர் தூவி தேங்காய் பூசணிக்காய் உடைத்து வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனுக்கு திருஷ்டி கழித்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் வேட்பாளர் ஜிவி.கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பெரிய கடை வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் அதிமுக வேட்பாளர்
ஜி.வி.கஜேந்திரன் திடிரென உள்ளே நுழைந்து பூரி மாவு திரட்டி எண்ணெய்யில்
போட்டு பூரி தயாரித்து பின்னர் இட்லி மாவு ஊற்றி இட்லி சுட்டு உணவகத்தில்
உள்ள பொதுமக்களிடம் அதிமுக துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

ஆரணி அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் தினந்தோறும் பொதுமக்களின்
கவனத்தை ஈர்க்க பல்வேறு கோணத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது
குறிப்பிடதக்கது.


Watch – YouTube Click

What do you think?

நயினார் நாகேந்திரன் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா ரோடு‌ ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்