in

கோயிலில் சிலைகள் மாயமான விவகாரம் போலீசார் கோயில் அதிகாரிகளிடம் விசாரணை


Watch – YouTube Click

கோயிலில் சிலைகள் மாயமான விவகாரம் போலீசார் கோயில் அதிகாரிகளிடம் விசாரணை

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை என நிர்வாக அதிகாரி புகார் அடிப்படையில் இன்று திடீர் சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரங்கள் மற்றும் கற்சிலைகள் காணவில்லை என செயல் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த 29ஆம் தேதி புகார் அளித்திருந்தார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஸ்தலமாகும். இக்கோவிலில் வருடம் தோறும் திருவாடிப்பூரஉற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இவ் விழாக்களில் கலந்து கொள்ள தமிழக மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

இந்நிலையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார் அதில் கடந்த 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபரம் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது. குறிப்பாக திருக்கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் போது விழாக்கள் ஆரம்பமாகும் போது கொடியேற்றும் கொடி மரங்கள் மூன்றும் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நிர்மாணிக்கப்பட்டது.

அவ்வாறு அகற்றப்பட்ட பழமையான மூன்று கொடி மரங்களில் செப்பு தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. இச்செயல் சட்ட விரோதமான செயலாகும் காணாமல் போன இரண்டு கொடி மரங்கள் குறித்து விசாரித்தபோது திருக்கோவில் வெள்ளை அடிப்பு பணியை நடந்த போது மரும நபர் லாரி மூலம் கொடி மரங்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது சட்டவிரோத செயலாகும். ஆகையால் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.

மேலும் முன்னதாக கடந்த 2008 2009 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த பழமையான கற்களான யானை சிலைகள் இரண்டு காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரங்கள் சட்டவிரோதமாக வெளியே எடுத்துச் சென்ற சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பாக இன்று சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர் தலைமையில் மொத்தம் 10 போலீசார் கோவிலில் உள்ள வளாகத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கைஅம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

தமிழக சட்டபேரவையில் தமிழ் மொழி குறித்து உறுதிமொழி