in

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை


Watch – YouTube Click

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை நேற்று முதல் வந்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தனியார் ஹோட்டலில் வரும் நாடாளுமன்றத் தொகுதி 40க்கு 40 வெற்றி பெறுவதற்கான இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ,மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

சொன்னதை கூட செய்யாதவர்கள் இன்று ஆட்சியில் உள்ளனர். ஏழைகளுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுக .

நீட்டை சொல்லி பிழைப்பை நடத்திய திமுக ஆட்சியில் விடியும் என்று சொன்னார்கள் .ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே நல்லது நடத்துள்ளது.

மதங்களை கடந்தவர் MGR, ஜெயலலிதா, எடப்பாடியார்.
இந்த இயக்கத்தை அழிக்காலாம், ஒழிக்கலாம் என நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

தீப்பெட்டி தொழில், பட்டாசு தொழிலில் பிரச்சனை ஏற்பட்ட போது அதை முழுமையாக பாதுகாத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக ஆட்சியில்செங்கல், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மண் பாஸ் கிடைக்காமல் வேறு வேலைக்கு சென்று விட்டனர்.

அதிமுக தொடங்கிய திட்டத்திற்கு வர்ணம் பூசியுள்ளது திமுக .
திமுக ஆட்சியில் ஒன்றும் செய்ய வில்லை.

முதல்வர் வெளிநாட்டு பயணம் சுற்றுலா சென்றது போல தான் உள்ளது. முதலீடுகள் ஈர்த்ததாக இல்லை .

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறது.

திமுகவினரே தங்கள் கட்சியை ஒதுக்குகின்றனர். திமுக வினரே அதிமுக தான் அடுத்த ஆட்சிக்கு வரும் என கூறுகிறார்கள்.

எடப்பாடியார் மட்டுமே தமிழுக்காக உண்மையாகவும், உறுதியுடணும் உழைக்க கூடியவர் என்றும் எனவே அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு கண்டணம்

மது போதையில் விபரீத முடிவு