in

மது போதையில் விபரீத முடிவு


Watch – YouTube Click

மது போதையில் விபரீத முடிவு

மது போதையில் தந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகன்.45 சதவீத தீக்காயங்களுடன் தந்தை திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் வயது 67.இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் மணிகண்டன் வயது 36.மகனுக்கு திருமணமாகாத நிலையில் தந்தையும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.மணிகண்டன் கொத்தனார் வேலைக்கு சென்று வந்த நிலையில் மகன் சிரமப்படக்கூடாது என்பதற்காக தந்தை அவனுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார்.அதையும் விற்று விட்டு மதுவுக்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்ததுடன் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தந்தையுடன் அவன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மணிகண்டன் மது போதையில் தனது தந்தை நாராயணனை தகாத வார்த்தையால் திட்டி சண்டை போட்டு உள்ளார்.பதிலுக்கு நாராயணனும் மகனை கண்டித்து திட்டியதால் மணிகண்டன் வீட்டில் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து நாராயணன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.இதனையடுத்து நாராயணனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இது குறித்து நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாராயணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தந்தையை தீவைத்துக் கொளுத்திய மணிகண்டனை நன்னிலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுபோதையில் மகனே தந்தையை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை

கந்து வட்டி கொடுமை