in

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது


Watch – YouTube Click

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது

 

நெல்லை மாவட்டத்தில் நகர்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 85 கோடி மதிப்பீட்டில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் டார்லிங் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாக நிலையம் பன்னாட்டு வாகன நிறுத்தம் பொருட்க்காட்சி திடலில் தொழில் முனைவோர் கூட்ட அரங்கம் என மாநகர் பகுதியில் 135.18 கோடி மதிப்பில் திட்ட பணிகள், ரூபாய் 12.05 கோடி மதிப்பீட்டில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகைகுளம் மற்றும் 12 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா 423.13 கோடி மதிப்பீட்டில் களக்காடு நகராட்சி மற்றும் ஏழு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டவைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது நெல்லை மாவட்டத்தின் நீர்பாசனத்திற்கு அணைகள் கட்டி விவசாயதத்தை ஊக்குவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு அதிநவின வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்.

திமுக அரசு அமைந்த பின்னர் விளையாட்டு துறை அபரிவிதமான வளர்ச்சிகளை பெற்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

எதிர்கட்சியாக இருந்தபோதே மாவட்டம் வாரியாக மக்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு உணர்ந்தது. திமுக அரசு அமைந்த பின்னர் தற்போது அதனை செய்து வருகிறது.வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டிபோட்டது. சென்னையில் மிக்ஜாம் புயல் பாதித்த ஒரு சில நாட்களிலேயே பெருவெள்ளத்தால் நெல்லை தூத்துக்குடி பாதிப்படைந்தது.மழை வெள்ளத்தால் இந்த பேருந்து நிலையம் பாதிக்கப்பட்டது.

இரவோடு இரவாக மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டார். சேலம் மாநாட்டை ரத்து செய்து இங்கேயே அமைச்சர்களும் நானும் தங்கி இருந்து பணி செய்தோம். இன்று பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு தமிழகம் 6 லட்சம் கோடியை கொடுத்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 1.5 லட்சம் கோடியை மட்டுமே தந்துள்ளது.

ஒரு ருபாய்க்கு மத்திய அரசு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ₹6000 வழங்கப்பட்டது.

நிகழ் காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு திட்டத்தோடு முதல்வர் செயல்படுத்திவருகிறார். சென்னையில் இருப்பது நெல்லையிலும் இருக்கவேண்டும், நெல்லையில் இருப்பது தென்காசியில் கிடைக்கவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். திமுக அரசு நெல்லையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து புதியதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்துகளை கொடியசைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ, தங்கராஜ் உள்ளிட்டு வரும் நெல்லை நாகர்கோவில் மாநகராட்சி மேயர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் மற்றும் அரசு அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களும் கருணை அடிப்படையில் வருவாய் துறையில் பணி செய்ய 6 நபர்களுக்கு அரசாணையும் வழங்கப்பட்டன.


Watch – YouTube Click

What do you think?

அரசு பள்ளியில் நூலகம் அமைத்து கொடுத்த வலிமை பட இயக்குனர் வினோத்

வெம்பகோட்டை பட்டாசு ஆலை விபத்து போர் மேன் மேலாளர் இருவர் கைது