in

வெம்பகோட்டை பட்டாசு ஆலை விபத்து போர் மேன் மேலாளர் இருவர் கைது


Watch – YouTube Click

வெம்பகோட்டை பட்டாசு ஆலை விபத்து போர் மேன் மேலாளர் இருவர் கைது

 

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

17.2.24 அன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது.

இதில் 5 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 6 பெண் தொழிலாளர்கள் மற்றும் 4ஆண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர்.விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து வெம்பகோட்டை காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை அருகே நேற்று ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் போர் மேன் சுரேஷ் குமார் என்பவரை கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலாளர் ஜெயபால் என்பவரை கைது செய்துள்ளது. உரிமையாளர் விக்னேஷ் குமாரை தேடி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வேலை