in

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வேலை


Watch – YouTube Click

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வேலை

 

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

சாத்தூர் அருகே குண்டாயிருப்பு பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராத விதமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழ்ந்த ஒருவருக்கு ரூபாய் மூன்று லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அறுதல் தெரிவித்து, நிவாரண நிதிக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினர்.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், ரகுராமன், மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

நேற்று ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்ததினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார், அவர்களுக்கு இன்று அதற்கான காசோலை வழங்கினோம்.

தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் இரண்டு லட்சத்து ஐயாயிரம் வழங்கப்பட உள்ளது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், அவர்கள் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்படும், இவர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

வெம்பகோட்டை பட்டாசு ஆலை விபத்து போர் மேன் மேலாளர் இருவர் கைது

ரூபாய் 500 கோடியில் பிரம்மாண்டமாக திரைப்பட நகரம் உருவாக்கப்படும்… மகிழ்ச்சியில் திரை துறையினர்