in

தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு


Watch – YouTube Click

தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு

 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் அருப்புக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் பிரச்சாரத்தை துவக்கும் முன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தார்.‌ அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.‌

அதனைத் தொடர்ந்து சமுதாய உறவின்முறை நிர்வாகிகளை சந்தித்து வரும் தேர்தலில் ஆதரவு கோரினார்.

மேலும் பாவடி தோப்பு, காந்தி மைதானம், திருநகரம், புதிய பேருந்து நிலையம், சின்ன பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர் இந்த தேர்தலில் ஒரு இளைஞருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் விஜயகாந்த் பிறந்தது ராமனுஜபுரம் தான்.

நமக்கான பந்தம் விட்டுப் போகவில்லை இரண்டு முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை இங்கு நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர்.

அவர்களுக்காக ஜவுளி பூங்கா கொண்டுவர பாடுபடுவேன் இது என் சொந்த ஊர் நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள். விஜயகாந்த் கனவை நினைவாக்குவதற்காக தான் இந்த பெரிய பொறுப்பை கையில் எடுத்திருக்கிறேன்.‌

அதை நான் மட்டும் செய்ய முடியாது நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.‌ எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது காந்தி மைதானம் பகுதியில் தம்பதியரின் வேண்டுகோளுக்கு இணங்க பிறந்த இரண்டு மாதமான குழந்தைக்கு விஜய ராமச்சந்திரன் என பெயர் சூட்டினார்.


Watch – YouTube Click

What do you think?

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு அநீதி

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்து பேசினார்